மும்பை: இந்தியா-தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் 3 ஒரு நாள் போட்டிகள் முறையே ஜன.19, 21, 23ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் தற்போது வார இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடையில் காயம் அடைந்த ரோகித்சர்மா உடற்தகுதியில் குழப்பம் நீடிக்கிறது. அவர் உடற்தகுதியை மீண்டும் பெற இன்னும் சில நாட்கள் ஆகலாம் என தெரிகிறது.