செஞ்சூரியன்: இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன் எடுத்தது. நேற்றைய 2ம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது. இதனிடையே இந்திய அணியில் ஆல்ரவுண்டராக இடம் பிடித்துள்ள ஷர்துல் தாகூர், அஸ்வினுடன் நடந்த உரையாடலில் கூறியதாவது:
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் செயல்பட்டது போல் தென்ஆப்ரிக்காவிலும் எனது சிறப்பான ஆட்டத்தை பிரதிபலிக்க விரும்புகிறேன்.