வரும் 28ம் தேதி 137வது ஆண்டு விழா காங்கிரஸ் தொண்டர்களுக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உதயமாகி 136வது ஆண்டை நிறைவு செய்து, 2021ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி 137வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. என இந்நாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட வேண்டும். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் முதல் கிராமங்கள் வரையிலும், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களிலும் காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவன நாளான டிசம்பர் 28 அன்று, சென்னை சத்தியமூர்த்தி பவன் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள 150 அடி உயர கொடிக் கம்பத்தில், காலை 9 மணிக்கு  காங்கிரஸ் கொடியை ஏற்ற இருக்கிறேன். அங்கு சேவாதள அணிவகுப்பு மரியாதையும் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: