சென்னையில் உயிரிழப்பு இல்லை தமிழகத்தில் 604 பேருக்கு கொரோனா

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,01,713 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 604 பேருக்கு  பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனாவால்  பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,41,617 ஆக உள்ளது. நேற்று  கொரோனாவில் இருந்து 695 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கொரோனா  பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,97,939 ஆக  உயர்ந்துள்ளது. மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர்  நேற்று உயிரிழந்தனர். அதன்படி கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவள்ளூர் ஆகிய  மாவட்டங்களில் தலா ஒரு நபர் உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை 36,699 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் உயிரிழப்பு ஏதும் இல்லை.

 மேலும்  அதிகபட்சமாக சென்னையில் 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற  மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாகவே உள்ளது.  இதையடுத்து ஒரு மாவட்டத்தில் மட்டுமே நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: