மியான்மர் : மியான்மரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 170 தொழிலாளர்கள் உயிரோடு புதைந்து இறந்த அதே சுரங்கத்தில் இன்று 80க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வடக்கு மியான்மரில் அமைந்துள்ள காச்சின் மாநிலத்தில் பச்சை மாணிக்க கல் சுரங்கத்தில் தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது. இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்த சுரங்கத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த சுரங்கப்பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். உடனடியாக வந்த மீட்புப் படையினர், 25 பேரை பலத்த காயங்களுடன் காப்பாற்றினர்.