இமாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு

மண்டி: இமாச்சலப் பிரதேசத்தில் மண்டி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளார். மண்டி நகரில் இருந்து மேற்கே 24 கி.மீ. தொலைவில் பாஞ்சியத்ருவில் 5.கி.மீ. ஆழத்தில் நிலநடுக்க மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என மண்டி மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: