விருதுநகர்: தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவலை சமாளிக்க அரசு மருத்துவமனைகளில் 1.25 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். விருதுநகரில் பணிகள் நிறைவுற்ற மருத்துவக்கல்லூரியை நேற்று பார்வையிட்ட அவர் வகுப்பறைகள், ஆய்வுக்கூடம், உணவுக்கூடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாக கூறினார்.