கடலூர்: கடலூரில் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இரு தரப்பினரையும் சேர்த்து 13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களில் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் பாதிரி குப்பதிலுள்ள அதிமுக அலுவலகத்தில் உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதின் நகர பதவிகளை பிரிப்பதில் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத்தின் ஆதரவாளர்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து மோதிக்கொண்டனர்.மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார் மற்றும் நகர துணை செயலாளர் கந்தன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் அப்போது ஒருவரிலொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.