விருதுநகர்: விருதுநகர் நகராட்சி மற்றும் அதனைச் சுற்றிய சிவஞானபுரம், ரோசல்பட்டி, பாவாலி, கூரைக்குண்டு ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள வீடுகள், கடைகளில் முறையாக, முழுமையாக குப்பைகளை வாங்குவதில்லை. மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து குப்பை வாங்க வரும் பணியாளர்களில் சிலர் காசு கொடுப்பவர்களிடம் மட்டும் குப்பைகளை வாங்குகின்றனர்.இதனால் வீடுகள், கடைகள், ஓட்டல்களில் சேரும் குப்பைகளை உரிமையாளர்கள் சாலையோரங்கள், ஓடைகள், நான்கு வழிச்சாலையோரங்களில் கொட்டிச் செல்கின்றனர். அத்துடன் அந்த குப்பைகளை தீ வைத்தும் எரிக்கின்றனர். இதனால் சாலைகளில் புகைமூட்டம் என்பது தினசரி நிகழ்வாகிறது. சத்திரெட்டியபட்டி துவங்கி கலெக்டர் அலுவலகம் வரை நான்கு வழிச்சாலையோரங்களில் குப்பைகள் இருபுறமும் குவியல், குவியலாக குவிந்து கிடக்கின்றது.