தா.பேட்டை: திருச்சி மாவட்டம் முசிறியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் பின்புறம் பச்சிளம் குழந்தையின் அழுகுறல் இன்று காலை கேட்டது. இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஒரு கட்டைப்பையில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது. இதுகுறித்து முசிறி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. எஸ்ஐகள் பானுமதி மற்றும் மாலிக் ஆகியோர் கட்டைப்பையில் இருந்த குழந்தையை மீட்டு, தலைமை மருத்துவர் காந்திடம் ஒப்படைத்தனர்.