கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

சென்னை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வானதி சீனிவாசன் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி வேட்பாளர் கே.ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார்.  வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக மனுதாரர் கே.ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், மனுதாரர் புகாருக்கு ஆதாரம் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். ம.நீ.ம வேட்பாளர் கமல்ஹாசனை விட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 1600 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Related Stories: