புதுடெல்லி ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது லோக்பாலில் தபால் மூலமாகவும், இமெயில் அல்லது கையில் ஒப்படைத்தல் மூலமாக புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் லோக்பாலில் ஆன்லைன் மூலமாக புகார் தெரிவிக்கும் வகையில் லோக்பால் ஆன்லைன் என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டின் எந்த பகுதியில் இருந்தும், எந்த நேரத்திலும் ஆன்லைன் மூலமாக புகார்களை பதிவு செய்யலாம். அதிக வெளிப்படை தன்மை கொண்டது.