ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவில் உள்ள பாரகம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர், அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதல் நடத்தினர்.