திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் சமூக பாதுகாப்பை கடைபிடிக்க கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சினிமா திரையரங்கம், டாஸ்மாக் கடை, மால், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் வருவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தயிருக்க வேண்டும் என எச்சரித்து இருந்தனர். இந்நிலையில், திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் நகராட்சி ஆணையர் சி.வி.ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட நிர்வாகம் அனுப்பியிருந்த சுற்றறிக்கையை கடையில் மாட்டாமல் வைத்திருந்ததால் பணியில் இருந்த ஊழியரை எச்சரித்து சுற்றறிக்கையை பொதுமக்கள் பார்வையில் படும்படி மாட்டிவைத்தார்.