முப்படை தலைமைத் தளபதி மரணம் தொடர்பாக சர்ச்சை கருத்து கூறியதாக மாரிதாஸ் என்கிற யூடியூபர் கைது.!

மதுரை: முப்படை தலைமைத் தளபதி மரணம் தொடர்பாக சர்ச்சை கருத்து கூறியதாக மாரிதாஸ் என்கிற யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மதுரை புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று குன்னூரில் நடந்த விமான விபத்தில் முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர். நேற்று நடந்த விமான விபத்தில் இந்தியாவின் முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பலியானது இந்திய மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த  விமான விபத்து சம்மந்தமாக அரசுக்கு எதிரான கருத்தைப் பதிவிட்டதாகவும் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அறிந்த மாரிதாஸ் தன்னுடைய பதிவை நீக்கியுள்ளார். இதையடுத்து வேறு சில வழக்குகளிலும் சர்ச்சையானக் கருத்தை தெரிவித்த மாரிதாஸ் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த சின்ஹா தெரிவித்திருக்கிறார்.

Related Stories: