பாலக்காடு: தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள அட்டப்பாடியில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 4 நாட்களில் 5 பழங்குடியின குழந்தைகள் உயிரிழந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் தமிழ்நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ளது அட்டப்பாடி மலை கிராமம். 40 ஆயிரத்திற்கும் அதிகமான பழங்குடியின மக்கள் வசிக்கும் இக்கிராமத்தில் கடந்த 2013ம் ஆண்டு ஊட்டச்சத்து குறைபாட்டால் பிறந்த குழந்தைகள் அதிகம் உயிரிழந்தனர். இவ்விவகாரம் அப்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், அதேபோன்ற பிரச்னை தற்போது மீண்டும் எழுந்துள்ளது.