சித்தூர் : சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் அனுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பக்தவச்சலம் மற்றும் அவரது மனைவி ரங்கம்மா ஆகியோர் நேற்று கலெக்டர் முருகன் ஹரிநாராயணாவிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் ரகு என்பவர் எங்களை அடித்து மிரட்டி 5 ஏக்கர் நிலத்தை அவரது பெயருக்கு மாற்றி கொண்டார். பின்னர், எங்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார். இதனால், நாங்கள் உண்ண உணவு இன்றி பெரும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை உடனடியாக மீட்டுத்தர வேண்டும்.