பள்ளிப்பட்டு: இலவச வீட்டுமனை பட்டா வழங்ககோரி வட்டாட்சியர் அலுவலகத்தை அருந்ததியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பாலாபுரம் ஊராட்சி அருந்ததி காலனியில் 80க்கும் மேற்பட்ட அருந்ததியினர் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் இரண்டிற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதால், போதிய இடவசதியின்றி அவதிப்படுகின்றனர். இதனால் தனித்தனியாக வீடு கட்டிக் கொண்டு குடியேற வசதியாக இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக வருவாய்த்துறை அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.