தேசிய அளவில் நியமனம் பாஜ.வில் மேலும் 5 பேருக்கு பதவி

புதுடெல்லி: பாஜ,வின் தேசிய பொது செயலாளராக வினோத் தவ்தே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 2 தேசிய செயலாளர்களும், 2 தகவல் தொடர்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்பட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன்பாக அந்த மாநிலங்களில் பாஜ தனது கட்சி அமைப்புக்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து தேசிய அளவில் பல்வேறு பொறுப்புக்களுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாஜ.வின் பொதுச் செயலாளரான புபேந்திர் யாதவ் ஒன்றிய அமைச்சரானதை தொடர்ந்து, அந்த பதவி காலியாக இருந்தது. இந்த இடத்துக்கு தேசிய செயலாளராக இருந்த வினோத் தவ்தே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கட்சியின் புதிய தேசிய செயலாளர்களாக ரிதுராஜ் சின்கா, ஆஷா லக்ரா நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் புதிய செய்தி தொடர்பாளர்களாக  மேற்கு வங்கத்தை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பார்தி கோஷ், சேஷாத் பூனவாலே நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா பிறப்பித்துள்ளார்.

Related Stories: