திண்டிவனம்: திண்டிவனம், செஞ்சி, மயிலம், வானூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தில் நேற்று நடைபெற்றது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்று பேசியதாவது: உங்களை பார்க்கும்போது எனக்கு உற்சாகம். என்னை பார்க்கும்போது உங்களுக்கு உற்சாகம். ஆனால் தேர்தல் வந்தால் அது ஓட்டாக மாறவில்லை. செஞ்சி தொகுதி பாமகவின் கோட்டை. தற்போது கோட்டை விட்டுவிட்டு கட்சி நடத்தி கொண்டிருக்கிறோம். 42 ஆண்டு காலத்தில் 32 ஆண்டுகள் கட்சி தொடங்கி ஒருமுறைகூட ஆட்சி செய்யவில்லை என்ற கோளாறு மக்களிடமா அல்லது பொறுப்பாளர்களிடமா அல்லது கட்சிக்கு தலைமை தாங்குகின்ற, கட்சி ஆரம்பித்து 42 ஆண்டு காலம் உங்களோடு பயணித்து வந்து கொண்டிருக்கிற என்னிடமா. எங்கே கோளாறு என்பதை கண்டறிய வேண்டும்.