காந்திநகர்: குஜராத்தில் அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில், பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து சீனாவின் ஷாங்காய் நகருக்கு அனுப்பப்பட்ட கன்டெய்னர்கள் கப்பலில் வந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் இந்த கன்டெய்னர்களை சுங்க இலாகா அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். தீங்கில்லாத பொருட்கள் அனுப்பப்படுவதாக குறிப்பிட்டிருந்த அந்த கன்டெய்னர்களை ஆய்வுக் கருவிகள் கொண்டு பரிசோதித்ததில் அதில் அபாயகரமான கதிரியக்க பொருட்கள் இருப்பதாக காட்டப்பட்டது.