வேளாண் சட்டம் வாபஸ்; கமல் வரவேற்பு

சென்னை: ஒன்றிய அரசு வேளாண் சட்டத்தை வாபஸ் பெற்றதை மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். வேளாண் விரோத சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமைகொள்ளத்தக்க வரலாற்று தருணங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: