விருத்தாசலம் : விருத்தாசலம் நகரத்தில் இருந்து நாச்சியார்பேட்டை வழியாக எருமனூர், தொட்டிக்குப்பம், ரெட்டிகுப்பம், மு.பட்டி, முகாசபரூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையை பயன்படுத்தி பொது மக்கள் அன்றாட தேவைகளுக்காக விருத்தாசலம் மற்றும் மங்கலம்பேட்டை சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதியில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் இயங்கி வருவதால் அதிக அளவில் மாணவ, மாணவிகள் இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.