புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் 2வது கிராமத்தை சீனா உருவாக்கி வருவதற்கான புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேசம் தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், அசல் கட்டுப்பாட்டு கோடு ஒட்டிய பகுதியில் அமைதியாக ஆக்கிரமிப்பு பணிகளை சீனா செய்து வருகிறது. இம்மாநில எல்லையில் 100 வீடுகளை கட்டி ஒரு கிராமத்தை சீனா முதலில் உருவாக்கியது. இது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது. இதை அமெரிக்காவும் உறுதி செய்தது.
பேச்சுவார்த்தைகிழக்கு லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இருநாட்டு ராணுவத்தையும் திரும்பப் பெறுவது தொடர்பாக இந்தியா - சீனா இடையே விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது. ஏற்கனவே நடந்த 13 சுற்று பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், 14வது சுற்று பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இது எப்போது நடக்கும் என்று கூறப்படவில்லை.காங்கிரஸ் கேள்விகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் நேற்று அளித்த பேட்டியில், ‘இந்திய எல்லைக்குள் சீனா 100 சதுர கிமீ தூரத்துக்கு ஊடுருவி உள்ளது. இந்த எல்லைகளில் 4 கிராமங்களை அது அமைத்து வருகிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த எல்லை பகுதிகளை ஒன்றிய பாஜ அரசு சமரசம் செய்து கொண்டுள்ளது. ஏன், இந்தியா அமைதி காக்கிறது என்று தெரியவில்லை. எனவே, இதன் பின்னணியை மறைக்காமல் பிரதமர் மோடி, மக்களுக்கு பதிலளிக்க வேண்டும்,’ என்று கூறினார்.