சென்னை: முரசொலி அறக்கட்டளை அலுவலக இடம் தொடர்பாக தவறான செய்திகளை வெளியிட்டு அவதூறு பரப்பியதாக பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக பாஜ முன்னாள் தலைவர் எல்.முருகன், பாஜ நிர்வாகி டாக்டர் சீனிவாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்குமாறு திமுக அமைப்பு செயலாளர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்கு உரிய பதில் வராததால் அவர்கள் மீது ஆர்.எஸ்.பாரதி சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தனித்தனியாக அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை விசாரித்த எழும்பூர் 14வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வழக்கை டிசம்பர் 16ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.