டெல்லி: ஜனநாயக நாடுகள் கிரிப்டோகரன்ஸிகளில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி சிட்னி உரையாடலில் பேசினார். பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடக்க சிட்னி உரையாடலில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்தியாவின் தொழில்நுட்ப பரிணாமம் மற்றும் புரட்சி என்ற கருப்பொருளில் சிறப்புரை ஆற்றினார். இந்த உரைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிமுகக் குறிப்புகளை வழங்கினார். அவை எங்கள் இளைஞர்களைக் கெடுக்கக்கூடிய தவறான கைகளில் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என உரையாற்றினார். தொழில்நுட்பமும், தரவுகளும் புதிய ஆயுதங்களாக மாறிவரும் சகாப்தத்தின் காலத்தில் நாம் இருக்கிறோம். ஜனநாயகம் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு அவசியமானது, அது தேசிய உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும், வர்த்தகம், முதலீடு மற்றும் பொது நலன்களை ஊக்குவிக்க வேண்டும்.