சென்னை: கால்நடை பராமரிப்புத்துறையில் கருணை அடிப்படையில் 23 வாரிசு தாரர்களுக்கு பணிநியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்புத் துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த 23 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.