என்சிஏ இயக்குநகர் பதவிக்கு முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. டிசம்பர் 4-ம் தேதி பிசிசிஐ அமைப்பின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கொல்கத்தாவில் நடக்க உள்ளது. அதற்குள்ளாக விவிஎஸ் லட்சுமண் நியமன அறிவிப்பு வெளியாகிவிடும்எனத் தெரிகிறது. இந்திய அணிக்கு வருங்கால வீரர்களை உருவாக்கும் பட்டறையாக என்சிஏ இருந்து வருகிறது.