மதுரை: மதுரை, அண்ணா நகர், காமராஜர் தெருவை சேர்ந்த 30 வயதான இளம்பெண், நேற்று முன்தினம் இரவு டூவீலரில், டெபுடி கலெக்டர் காலனியில் உள்ள மாமா வீட்டிற்கு உணவு கொண்டு சென்றார். உணவை கொடுத்து விட்டு திரும்பியபோது, அண்ணா நகர் செண்பகத்தோட்டத்தை சேர்ந்த ரவுடியான குருவி விஜய்(30), வண்டியூரை சேர்ந்த கார்த்திக் (எ) மௌலி(28) ஆகியோர் அந்த பெண்ணை மறித்து, ஆக்ஷா பிளேடை காட்டி மிரட்டினர். அப்போது, இளம்பெண் சத்தம் போடவே, அந்த பெண்ணின் மாமா ஓடிவந்து இருவரையும் தடுத்தார். அவரை கீழே தள்ளி விட்டு, பெண்ணை தங்களது டூவீலரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றனர். அருகே நின்ற ஒரு வேனில் பெண்ணை ஏற்றி பலாத்காரம் செய்ய முயன்றனர். அந்த பெண்ணின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். காவல் கட்டுப்பாட்டு அறை வேன் வரவே குருவி விஜய், கார்த்திக் தப்பி ஓட முயன்றனர். போலீசார் இருவரையும் பிடித்து வேனில் ஏற்றி, அண்ணாநகர் காவல் நிலையம் கொண்டு வந்தனர். பெண்ணும் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார்.