வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே பைபாஸ் சாலையில் கணவாய்ப்பட்டி பிரிவில், தேனி சாலையிலிருந்து திண்டுக்கல் நோக்கி ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். இவருக்கு முன்னால், தேனியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் ஒரு காரிலும், அதற்கு முன் மினி லாரி ஒன்று வாழைத்தார்களை ஏற்றியும் சென்றுள்ளது. மினி லாரி திடீரென வத்தலக்குண்டு சாலையில் திரும்பவே, அதன் பின்னால் வந்த பன்னீர்செல்வத்தின் காரும், அடுத்த வந்த எம்எல்ஏ காரும் அடுத்தடுத்து மோதின. இதில் மினி லாரியில் இருந்த 6 பெண் தொழிலாளர்கள் உள்பட 7 பேர் காயமடைந்தனர். எம்எல்ஏ மகாராஜன், அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்….
The post மினி லாரி, கார்கள் அடுத்தடுத்து மோதல் ஆண்டிபட்டி எம்எல்ஏ தப்பினார் appeared first on Dinakaran.
