சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 42 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைப்பு: வனத்துறை தகவல்

சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 42 ரிசார்ட்டுகளுக்கு வனத்துறை சீல் வைத்துள்ளது. சத்தியமங்கலத்தில் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டவிரோத ரிசார்ட்டுகளை அகற்றி நடவடிக்கை எடுக்கவும், அறிக்கை தரவும் ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் சத்தியமங்கலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியில் 53 ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, 11 ரிசார்ட்டுகள் உரிய அனுமதி பெற்று செயல்பட்டு வந்தது கண்டுபிக்கப்பட்டதாக ஐகோர்ட்டில் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: