திருவனந்தபுரம்: கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. மாநிலம் முழுவதும் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் இரவு பத்தனம்திட்டா, கோட்டயம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில், சபரிமலை அருகே உள்ள எரிமேலி, கீரித்தோடு பகுதிகளில் நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. சத்தம் கேட்டதும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் உடனே அங்கிருந்து தப்பி ஓடினர். ஒருவர் மட்டும் சிக்கி படுகாயமடைந்தார்.