பள்ளிப்பட்டு: பாலாபுரம் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 127 ஆதிதிராவிடர்கள் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி எஸ்.சந்திரன் எம்எல்ஏவிடம் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.வி.தென்னரசு சார்பில் மனு வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பாலாபுரம் ஊராட்சியில் வருவாய் துறை சார்பில் மக்கள் குறை தீக்கும் முகாம் அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. இம்முகாமில், கலந்துக்கொண்ட திருத்தணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரனிடம் விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களுக்கு பட்டா, முதியோர் உதவி தொகை உட்பட பல்வேறு சான்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் கேட்டு 55 பேர் மனுக்கள் வழங்கினர்.