புதுடெல்லி: தலிபான்களால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக, டெல்லியில் இன்று பல்வேறு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு நடைபெறுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆட்சியை பிடித்துள்ளதால், அண்டை நாடுகள் மட்டுமின்றி உலகளவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டிலும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதனால், ஆப்கானிஸ்தானால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக ஆலோசிக்க, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, ஈரான், 5 மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்கும் மாநாட்டுக்கு இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. இதில் ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், கிரிகிஸ்தான், தஜகிஸ்தான், துர்மெனிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளன.