திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே விளைநிலங்களுக்கு அருகே மூட்டை, மூட்டையாக ரசாயனக்கழிவுகள் கொட்டப்பட்டிருப்பது விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா கொய்யான்கொல்லை பகுதியில் சுமார் 100 ஏக்கரில் நெல், கேழ்வரகு மற்றும் வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் விளைநிலங்களுக்கு அருகே ரசாயனக் கழிவுகள், தோல் கழிவுகள், ஆட்டின் உரோமங்கள் மற்றும் அகர்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனத் துகள்கள் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் மூட்டை, மூட்டையாக கொட்டிவிட்டு சென்றுள்ளார்கள்.