சென்னை: தீரன் சின்னமலை கலை அறிவியல் கல்லூரி தொடங்கிட அனுமதி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினை கொங்கு வேளாளர் அறக்கட்டளை நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினை, தலைமை செயலகத்தில், கே.சுப்பராயன் எம்பி, கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி, செயலாளர் எஸ்.கோவிந்தப்பன் மற்றும் நிர்வாகிகள்சந்தித்து, வீரர் தீரன் சின்னமலை பெயரில் மகளிர் கல்லூரி அமைக்க உதவியதற்காக நன்றி தெரிவித்தார்கள். திருப்பூர் - அங்கேரிபாளையம் சாலையில், கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கடந்த 30 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
தீரன் சின்னமலை கலை அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொங்கு வேளாளர் அறக்கட்டளை நிர்வாகிகள் நன்றி
- கொங்கு வேளாளர் அறக்கட்டளை
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- தீரன் சின்னமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி