ஐடி பார்க்கில் பீர், ஒயின் பார்: கேரள முதல்வர் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது முதல்வர் பினராய் விஜயன் கூறியதாவது: கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட இடங்களில் ஐடி பார்க்குகள் உள்ளன. இங்கு புதியதாக நிறுவனம் தொடங்க வருபவர்கள், நிறுவனங்களில் பீர், ஒயின் பார்கள் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு அனுமதி இல்லாததால் பல நிறுவனங்கள் திரும்பி சென்றுவிட்டன. இதனால், ஐடி பார்க்குகளில் பீர், ஒயின் பார்கள்  தொடங்க கடந்த இரு வருடங்களுக்கு முன் முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா  பரவல் தொடங்கியதால் அந்த தீர்மானம் தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா பரவல் முடிந்ததும் ஐடி பார்க்குகளில் பீர், ஒயின் பார்கள் தொடங்க அனுமதி அளிக்கப்படும் என்றார்.

Related Stories: