இளம்பிள்ளை : வீரபாண்டி, ஆத்துக்காடு பாலத்தில் நிரம்பி வழியும் ரசாயன கழிவு நீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.வீரபாண்டி, பூலாவரி, ஆத்துக்காடு பகுதியில் தரைமட்ட நீர் ஓடை பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியே இளம்பிள்ளை, ஜலகண்டாபுரம் மற்றும் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். காலையில் உழவு பொருட்களை டிராக்டரில் அதிகம் கொண்டு செல்வது வழக்கம். தற்போது தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதேபோல், சேலம் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்காடு அடிவாரம் மற்றும் வீரபாண்டி, பூலாவரி பகுதியில் பெய்த கனமழையால் திருமணிமுத்தாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தது.