கடலூர்: தீபாவளியை முன்னிட்டு கடலூர் அருகே வேப்பூர் வாரச்சந்தையில் இன்று 4 மணி நேரத்தில் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திட்டக்குடி அடுத்துள்ள வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தீபாவளி நெருங்கி வரும் நிலையில் இன்று நடைபெற்ற சந்தையில் வேப்பூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்ததால் ஆட்டுச்சந்தை களைகட்டியது.