ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை இத்தாலி தலைநகர் ரோம் நகருக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி

டெல்லி: டெல்லி: ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று அதிகாலை இத்தாலி தலைநகர் ரோம் நகருக்குப் புறப்பட்டுச் சென்றார். ரோம் செல்லும் வழியில் வாடிகன் நகரில் போப் ஆண்டவரான (போப்பாண்டவர்) போப் பிரான்சிசை நாளை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

ஜி 20 கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் கொரோனா கால பாதிப்புகள், கொரோனா லாக்டவுன்களால் பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகளின் பொருளாதார மீட்சி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

Related Stories: