காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மெகா நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்திடமும், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசனிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் சட்டமன்ற நிதியிலிருந்து 44.86 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.இந்த நிதியில் பேருந்து நிலையத்தில் சென்னை பேருந்துகள் நின்று செல்லும் இடத்தில் 6 மீட்டர் உயரத்திற்கு மெகா பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக நேற்று காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் அடிக்கல் நாட்டி பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பணியினை துவக்கி வைத்தார்.