சென்னை: பொதுத் துறை நிறுவனங்களான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் பங்கு ஈவுத் தொகையாக ₹155 கோடியே 26 லட்சத்து 67 ஆயிரத்து 718க்கான காசோலைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு அரசுக்கு 2020-21ம் ஆண்டிற்கான பங்கு ஈவுத் தொகையாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) சார்பில் ₹77 கோடியே 93 லட்சத்து 33 ஆயிரத்து 18க்கான காசோலையும், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) சார்பில் இடைக்கால ஈவுத் தொகையாக ₹70 கோடிக்கான காசோலையும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பில் 7 கோடியே 33 லட்சத்து 34 ஆயிரத்து 700 ரூபாய்க்கான வங்கி வரைவோலை என மொத்தம் 155 கோடியே 26 லட்சத்து 67 ஆயிரத்து 718 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.