40 சதவீதம் போனஸ் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பு மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் வம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 40 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட துணை தலைவர் ஜி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட பொருளாளர் நித்தியானந்தம், டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜி.சந்திரன், பொருளாளர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் குமார், புஷ்பராமன் உள்பட பலர் கலந்து கொண்டு, தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 40 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். மேலும், இது தொடர்பாக தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கோரிக்கை மனுவை டாஸ்மாக் கிடங்கு மேலாளர் பாலாஜியிடம் மனு அளித்தனர்.

Related Stories: