புதுடெல்லி: இந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது காலை 4 மணி நேரமும், மாலை 4 மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கும்படி கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம், பேரியம் மற்றும் நைட்ரேட் ரசாயனங்கள் அடங்கிய பட்டாசுகளை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது. பட்டாசு வெடிக்கும் நேரத்தை நீட்டிப்பது பற்றி இன்னும் அது உத்தரவு பிறப்பிக்கவில்லை.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்திய பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று புதிய மனு தாக்கல் செய்தது.