வாலாஜா : வாலாஜா ரயில் நிலையத்தில் நடந்த சோதனையில் ரயிலில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.வாலாஜா வழியாக செல்லும் ரயிலில் வெளிமாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக ராணிப்பேட்டை பறக்கும் படை தாசில்தாருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. தாசில்தார் இளஞ்செழியன் மற்றும் போலீசார் வாலாஜா ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.