புதுடெல்லி: கடந்த 2014ம் ஆண்டில் இருந்தை விட கங்கை நதி நீரின் தரம் தற்போது மேம்பட்டுள்ளதாக, ‘கங்கை தூய்மை திட்டம்’ இயக்குனர் ஜெனரல் ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா கூறியுள்ளார். இது குறித்து கங்கை தூய்மை திட்டத்தின் இயக்குனர் ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா கூறியதாவது: கங்கை நதி நீரின் தரம் மேம்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு நதியின் 53 கண்காணிப்பு இடங்களில் 32 இடங்களில் ஆய்வு மேற்கொண்ட போது உயிர்களுக்கு தேவையான ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தது. ஆனால், 2021ல் 97 கண்காணிப்பு இடங்களில் 68 இடங்களில் மேற்கொண்ட ஆய்வில், உயிரிகளுக்கு தேவையான ஆக்சிஜன் தண்ணீரில் அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. நதி முழுவதும் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளது.