கண்டாச்சிபுரம்\ : விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த மேல் வெங்கமூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேல் ஒதியத்தூர்-வெங்கமூர் சாலையில் தினமும் வெங்கமூர் கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் என கிராமத்தினர் தினமும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒதியத்தூர்-வெங்கமூர் சாலையில் அதிகளவு வளைவுகளில் முட்புதர்கள் மற்றும் பூண்டு செடிகள் வளர்ந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.