கடலூர்: கடலூர் முதுநகர் அருகே காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜவேல் (15). இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 6.12.2017 டிசம்பர் 6ம் தேதி அரசு பஸ்சில் சென்றபோது டிரைவர் பிரேக் பிடித்ததில் படிக்கட்டின் அருகில் நின்ற ராஜவேல் கீழே விழுந்து பலியானார். இதையடுத்து ராஜவேலின் தாய் ஜெயலட்சுமி, இழப்பீடு கேட்டு கடலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.