கோவை : கோவை திருச்சி ரோடு ராமநாதபுரம் பகுதியில் இருந்த பள்ளத்தை கான்கிரீட் கலவை கொட்டி சீரமைத்த போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
கோவை திருச்சி ரோட்டில் மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியின் காரணமாக சாலையின் பல்வேறு பகுதிகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் சந்திப்பில் மேம்பாலம் பணியின் காரணமாக பெரிய பள்ளம் ஏற்பட்டு இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. மேலும், சமீபத்தில் பெய்த மழையினால் அந்த பள்ளம் மேலும் பெரியதானது. இதனை சரிசெய்ய சம்மந்தப்பட்ட துறையினர் முன்வரவில்லை.