இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, ஆடவர் ஒற்றையர்பிரிவில் இங்கிலாந்து வீரர் கேமரான் நோரி சாம்பியன் பட்டம் வென்றனர். மகளிர் ஒற்றையர் பைனலில் பெலராஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்காவுடன் (32வது வயது, 32வது ரேங்க்) மோதிய படோசா (23வயது, 27வது ரேங்க்) 3 மணி, 4 நிமிடங்களுக்க கடுமையாகப் போராடி 7-6 (7-5), 2-6, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக டபிள்யூடிஏ 1000 பிரிவிலும், பாரிபா ஓபனிலும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் 27வது ரேங்கில் இருந்த படோசா 13வது ரேங்கிற்கும், 2வது இடம் பிடித்த அசரென்கா 32லிருந்து 26வது ரேங்கிற்கும் முன்னேறினர்.